நீ என்னை அழ வைக்கப்பிறந்தவள்..
நான் உன்னை சிரிக்க வைக்கப்பிறந்தவன்
இது தெரியமால்தானே இத்தனை நாள் என்னை
அழ வைத்த்தாய் என்றதுமே
கண்ணீர் பொங்கிக்கொண்டு வந்தது உனக்கு
நானும் லேசாக அழுது - இன்னும்
என்னை அழ வைப்பதை நீ நிறுத்தவில்லையா..!?
என்றதுமே
நமக்கான சிரிப்பும் அழுகையும்
ஒருமித்து ஒட்டிக்கொண்டது
நம்மில் காதலாக..


No comments:
Post a Comment